
வாழ்த்துக்கள் சொல்வது எப்படின்னு நான் விளக்கம் கொடுக்க வரலைங்க..
உங்ககிட்ட கேட்கிறேன்.. தெரிஞ்சவங்க சொல்லுங்க..
ஏதோ, எனக்கு தெரிஞ்சா மாதிரி சொல்லிருக்கேன்..
நண்பர்கள் வாழ்த்துக்களை ஏத்துக்கணும்..
எப்படி சொல்வது?..
கவிதையாக சொல்வதா?
இல்லை வெறும் வார்த்தையாக சொல்வதா?
இல்லை, கவிதை என்று
தலைப்பிட்டு தோன்றுவதை சொல்வதா?
இவ்வருடம் முடிந்து..
புது வருடம் தொடங்கும்
இவ்வேளையில் கவிதையாக
சொல்வதே சிறந்தது.
எனினும்..
எழுத யோசித்தால் காதலிக்குக்
கடிதம் எழுதுபவன் போல..
எழுதிய பக்கத்தை விட,
கிழித்த பக்கங்களே அதிகம் என்பதால்..
காகிதத்தை வீணாக்காமல்
கணிப்பொறியில் அமர்ந்து விட்டேன்..
எதையெழுதி பதிப்பதானாலும்
இதிலேயே செய்தால்..
திருத்தும் வேலை மட்டும் தானே..
இருந்தாலும்..
பரீட்சை எழுதும் மாணவன் போல
வெறும் காகிதத்தை 'மட்டுமே'
கொடுப்பதை விட சொல்ல வந்ததை
சொல்லிவிட்டு போகிறேனே!!..
நண்பர்களே,
உங்கள் அனைவருக்கும் திவ்யாஹரியின்..
"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!.."