
நண்பர் பாலாசியின் புரையோடும் ஆலமரம் பதிவு ரொம்பவும் அருமை.. அதை படித்ததும் என் மனதை குடையும் (வலை தொடங்குவதற்கு முன்பிருந்து) சில சந்தேகங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. தவறாக இருந்தால் சுட்டி காட்டவும்.. விளக்கம் தெரியாததாலே தான் அதை சந்தேகம் என்கிறேன்.. உங்களுக்கு விளக்கம் தெரிஞ்சா பின்னூட்டத்துல விளக்குங்க. தெரிஞ்சிக்கிறேன்..
நண்பர் பாலாசியின் பதிவில் அவர் சொன்னது.. இது தான்..
//அது அம்மா வந்தால் கொஞ்சம், அப்பா வந்தால் கொஞ்சம், இல்லையேல் கருநாடகத்தில் வெள்ளம் வந்தால் ‘மிகவும்’ கிடைக்கும் வரம். (அதேநேரத்தில் இங்கே மழை அடித்துப்பெய்து கொண்டிருக்கும்) என்றும் இந்த வரம் ‘கடையாது’ என்றும் தெரியும்.//
சரியாச் சொன்னீங்க பாலாசி.. நன்றி..
இப்போ என் சந்தேகங்கள்:-
1) சாதாரணமான நாட்கள்ல தண்ணி தரமாட்டேன்னு சொல்ற கர்நாடகம், மழை பெய்து, அவங்க ஊர் மூழ்குற சமயத்துல மட்டும் ஏன் நம்ம பக்கம் தண்ணி விடுறாங்க?..
2) அப்போ மட்டும் அது அவங்க காவிரி இல்லையா? அந்த சமயத்துல மட்டும் அது பொது காவிரியா ஏன் மாறுது?
3) மற்ற நேரத்துல தண்ணி தராதவங்க அவங்க ஊர் மூழ்குற நேரம் மட்டும் அணை திறந்து விட, இது (தமிழ்நாடு) என்ன திறந்த மடமா?
4) ஏன் இப்படி தமிழ் நாட்டுக்காரன் மட்டும் கர்நாடகம் நல்லா இருக்கணும்னு நெனச்சி, அந்த தண்ணிய ஊருக்குள்ள விட்டுக்கிட்டு, அதிக வெள்ளப் பெருக்கால தன்னை தானே அழிச்சிக்கிறான்..
5) அந்த மாதிரி சமயத்துல நம்ம அரசாங்கம் ஏன் ஒரு ஒப்பந்தம் போட கூடாது? அதாவது..
"இப்ப வரும் தண்ணி எப்போதும் வருமென்றால் மட்டும் வரட்டும். இல்லேன்னா, பரவாயில்லை எங்களுக்கு தண்ணியே வேண்டாம்", என்று ஏன் சொல்ல கூடாது? உரிமையா தண்ணி கேட்க தான் முடியவில்லை நம்மால், நம்ம பக்கம் தண்ணி வர வேண்டாம்னு சொல்ல கூடவா உரிமை இல்லை?"
6) ஏன் நம்ம அரசாங்கம் கூட இந்த விஷயத்த யோசிக்கல?
7) இல்லேன்னா அப்படி ஒப்பந்தம் போட சொல்லிக் கேட்டா, அதனால ஏதாவது பிரச்சனை வருமா?
8) அவங்க மக்கள் தண்ணில சாகக்கூடாதுன்னு நாம யோசிக்கிறா மாதிரி, தண்ணி இல்லாம நம்ம விவசாயிகள் படும் கஷ்டத்தை பத்தி கர்னாடக மக்கள் ஏன் யோசிக்கல?
9) குஜராத்துக்கு வந்த மாதிரி பூகம்பம் ஏதாவது, கர்நாடகத்துக்கு வந்தா முதல்ல உதவுறது தமிழ்நாடாக தானே இருக்கும்? இத கூட யோசிக்க மாட்டாங்களா அந்த மக்கள்?
10) காவிரிய பொதுவா பயன்படுத்த கூடாதுன்னா நாம தரும் மின்சாரத்த மட்டும் ஏன் ஏத்துக்கணும்? நாம ஏன் கொடுக்கணும்?
இல்லைன்னு வர்றவங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்குறவன் தமிழன்னு வசனம் பேசி சமாதானம் ஆக முடியலைங்க.. எதையாவது செஞ்சி காவிரியை வரவைக்க முடியாதான்னு ஒரு ஆசை தான்.. இப்படி தான் செய்யணும்னு நான் சொல்லலைங்க.. இப்படி செஞ்சா என்னனு தான் கேட்குறேன்.. இப்படி செய்யலாமானு தான் கேட்குறேன்.. சொல்லுங்க நண்பர்களே?
குஜராத் பூகம்பம்..
அமெரிக்க விமான குண்டு வெடிப்பு..
அந்த்ராக்ஸ் பரவல்..
சுனாமி..
பன்றிக் காய்ச்சல்..
ஹைத்தி நிலநடுக்கம்..
மனிதனை அழிக்க
விதி பலவாறு வந்தாலும்..
வாழ்க்கை நிலையல்ல என்பது தெரிந்தாலும்..
மனித மனம் என்னவோ
தண்ணீரை கூட
விட்டுக் கொடுக்க நினைப்பதில்லை!!!!...