
ஆயிரத்தில ஒருவன் பார்த்தேன்ங்க.. நல்லா இருந்துச்சி. செல்வராகவன் (இயக்குனர்) என்ன சொல்ல வர்றார்னு எனக்கு புரிஞ்சிது.. ஆனா மத்த பதிவர்கள் மாதிரி, எனக்கும் சில சந்தேகம் கேட்கணும் இயக்குனர்கிட்ட.
எதுக்காக படத்துல இவ்வளவு வெளிப்படையான வசனங்கள்.. (கார்த்தி, ரீமா சென் கிட்டயும் ஆண்ட்ரியா கிட்டயும் பேசுற மாதிரியான வசனங்கள் தான் சொல்றேன்..)
எல்லா வலைத்தளங்களிலும், "நல்லா இருக்கு போய் பாருங்க.. செல்வராகவன் முயற்சிக்கு அது தான் நாம செய்ற மரியாதைன்னுலாம் கூட எழுதி இருந்தாங்க.."
அதை நம்பி இன்னிக்கே போகணும்.. அதுவும் இப்போவே.. போயே தீரணும்ன்னு அடம் பிடிச்சி.. போனேன்.. படம் ஆரம்பிச்சதும் கார்த்தி, கதாநாயகிகள் கிட்ட பேசுறதை பார்த்ததுமே என்னடா இதுன்னு தோணுச்சி. இவ்ளோ பேர் இருக்காங்க.. நமக்கு மட்டும் என்னன்னு என்னை நானே சமாதான படுத்திக் கொண்டு கண்டுக்காம படம் பார்த்தேன்.. இடைவேளை அப்போ தான் என் கணவர் ஒரு விஷயம் சொன்னார்.. (அவரும் அப்போ தான் கவனிச்சிருக்கார்) அங்கே நான் மட்டும் தான் பொண்ணு.. எல்லாரும் ஆண்கள்.. ஒரு லேடீஸ் கூட இல்ல..
அவ்ளோ நேரம் வரைக்கும் கொஞ்சமா சவுண்ட் விட்ட பசங்க இடைவேளைக்கு அப்புறம் அதிகமா சவுண்ட் விட்டுட்டு இருந்தாங்க.. (இல்லை எனக்கு தான் அப்படி தோணுச்சோ என்னவோ?) எல்லாரும் நார்மலா சிரிச்சது கூட என்னை கேலி பண்ணுவது போல இருந்தது.. அதுக்கு காரணம் படத்தின் காட்சிகள்.. நல்ல கதை.. அதை நல்ல விதமா சொல்ற திறமைலாம் இருந்தும் ஏன் நீங்களும் இப்படி..
"புரியவில்லை என்றால் கூட ஹிட் கொடுங்கன்னு" உங்களுக்கு பதிலா இங்கே எல்லாரும் (பல பதிவர்கள்) கேட்டுட்டு இருக்காங்க.. கண்டிப்பா அவர்களுக்கெல்லாம் (உங்க அந்த மாதிரியான காட்சிகள்ல) விருப்பம் இருக்காதுன்னு நம்புறேன்.. இருந்தாலுமே இவ்ளோ பகிரங்கமா எதிர்பார்க்க மாட்டாங்கன்னு நம்புறேன்.. ஏனெனில் அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கும்.. அதுவும் பார்க்கும்..
எனக்கு நேற்று ஆறுதலாக இருந்தது ஒரு முஸ்லிம் பெண்ணும் படம் பார்க்க வந்திருந்தது தான்.. அவர் இரண்டாம் வகுப்பில் இருந்திருக்கிறார்.. அவர்கள் கூட முகத்தை மறைத்து தான் இருந்தார்கள்.. நான் என்ன பண்ண..?
நல்ல படம் என்று சந்தோசப் படக் கூட விடவில்லை உங்களின் அந்த காட்சிகள்.. படம் முடிந்து வெளியில் வரும் போது படம் பார்த்த நிறைவை விட, இந்த படம் பார்க்க தியேட்டர்க்கு வந்துட்டோமேன்னு தான் தோணுச்சி.. "நீ மட்டும் தான் இப்படி நெனக்கிற மத்தவங்க அப்படிலாம் நெனக்க மாட்டங்கன்னு" என் கணவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு வந்தார்.. அவர் காதில் விழும் படியே அந்த முஸ்லிம் பெண், தன் கணவரிடம்.. "என்னை திட்டுனீங்களே.. அங்கே பாருங்க ஒரு பெண் என்று என்னை காட்டி சொன்னார்" (அவரும் என்னை மாதிரி படம் பார்க்க அடம் பிடித்திருப்பாரோ என்னவோ..)அந்த பெண்ணுக்கு நான் ஆறுதல் போல.. எனக்கு மட்டும் தான் தோணுதுன்னு நெனச்சது உண்மை இல்லை என்று உணர்ந்தேன்..
கடவுளே.. எல்லா பதிவர்களும் பசங்களுக்காகவே விமர்சனம் போட்டிருக்கீங்களே.. எங்கள கொஞ்சம் நெனச்சி பார்க்க கூடாதா?
மதிப்பிற்குரிய இயக்குனரே.. எங்களுக்கும் ரசனை உண்டு.. எங்களுக்கும் சரித்திரம் தெரியும்.. தமிழ் தெரியும்.. நாங்களும் படம் பார்ப்போம்.. பல ஆண்களுக்கு புரியாத உங்கள் படம் பல பெண்களுக்கு புரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு மட்டும்னு படம் எடுக்காமல் இனி பெண்களுக்காகவும் யோசிச்சி படம் எடுங்க.. மத்த படி நல்ல படம். நல்ல கதை.. நல்ல முயற்சி. உண்மையாவே இந்த படம் எல்லாரும் பார்க்க வேண்டியது.. இதுக்காக கண்டிப்பா நாம பெருமை பட்டுக்கலாம்.. தப்பா சொல்லிருந்தா பின்னூட்டத்துல புரிய வைங்க.. புரிஞ்சிக்கிறேன்.. நன்றி!!
(பி.கு) தயவு செய்து 15 +, 18 + படம் பார்க்கலாம்னு விமர்சனம் செய்வதை விடுங்க.. 'உன்மேல ஆசை தான்' பாட்டு முடிந்ததும் அவர்களின் நடவடிக்கை பார்த்து, சிரிக்கிறேனா பயப்படுகிறேனான்னு எனக்கே தெரியல.. அப்புறம்.. ஒவ்வொருவரும்தன் தலையை தானே வெட்டி கொள்வது (வன்முறை தானே), அதையும் பார்த்து பயம் தான் வருகிறது.. மன திடம் உள்ளவர்கள் பார்க்கலாம்னு எழுதுங்கள்.. கர்பிணிகள் பார்க்க வேண்டாம்னும் எழுதுங்கள்.. உங்களுக்கு புண்ணியமா போகும்..