Saturday, January 16, 2010

உன்னில் ரசிப்பவை..


காலையில் உன்னை எழுப்பும் போது
நீ செய்யும் சிணுங்கல்கள்..

காய் நறுக்கும் போது
நீ செய்யும் சீண்டல்கள்..

உணவு பரிமாறும் போது
நீ செய்யும் சில்மிஷங்கள்..

உன் தாயுடனிருக்கும் போது
நீ செய்யும் ஜாடைகள்..

உன் தம்பி தங்கையுடன் அரட்டை
அடிக்கும் போது உன் செல்லக் கோபங்கள்..

நீ எனக்கு வாங்கி வந்த இனிப்பை
உன் தங்கைக்கு தரும்போது நீ படும் அவஸ்தைகள்..

அனைத்து வேலைகளையும் முடித்து..
களைத்து வரும் போது வருடி விடும் உன் கைகள்..

அனைத்தும் ரசிப்பேன்..
எத்தனை முறை.. எத்தனை விதமாக..
சொன்னாலும் காதல் சுகமானது தான்!!..

Friday, January 15, 2010

"குட்டி" குட்டி விமர்சனம்..


"குட்டி விமர்சனம்"ங்க.

"குட்டி" படம் பார்த்தேன்..
தனுஷ், ஷ்ரேயா நல்லா நடிச்சிருக்காங்க..
காமெடி கூட கலக்கல்.. பாடல்கள் ரசிக்கலாம்..
தனுஷ் பண்றதெல்லாம் படம் பார்க்கிற எல்லாருக்கும் பிடிக்கும்..
தமிழுக்கு புது கதை தான்.. அரைச்ச மாவு இல்ல..
ஜாலியா இருக்க நெனச்சா குட்டி போங்க.. அவ்ளோ தான் சொல்ல முடியும்.. எல்லாரும் பாருங்க..
மொத்தத்துல ரொம்ப நல்லா இருக்கு..



(பி.கு: அவ்ளோ தானான்னு கேட்குறீங்களா? அதான் "குட்டி விமர்சனம்"னு ஆரம்பிக்கும் போதே சொன்னேன்ல.. வேணும்னா படம் பார்த்துட்டு நீங்க நிறைய எழுதுங்க.. எனக்கு அவ்ளோதான் எழுத வரும்.. ஹி.. ஹி.. ஹி..)

Wednesday, January 13, 2010

பொங்கட்டும் மகிழ்ச்சிப் பொங்கல்..


கெட்ட விஷயங்களை மறந்து..
புது வாழ்வு வாழ போகி..

வாய் மட்டும் இல்லாமல்..
பேசும் வார்த்தையும் இனிக்க கரும்பு..

வெள்ளை உள்ளங்கொள்ள
வலியுறுத்தும் பொங்கல்..

வாங்குபவர் வாழ்வும்
மங்களகரமாக மாற மஞ்சள்..

உழைத்த உள்ளங்கள் குளிர
அவர்களை போற்ற உழவர் திருநாள்..

அன்னையை போல பால் தந்து
உயிர்காக்கும் பசுவுக்காக பூஜை.. மாட்டுப் பொங்கல்..

அனைத்து பெண்களையும் போற்றும் வகையிலும்,
மகிழ்விக்கும் வகையிலும்.. கன்னிப் பொங்கல்..

இது பற்றி எல்லாம் நினைக்காமல் நடிகர்,
நடிகையிடம் பேட்டி காணும் டிவி சேனல்கள்..

தமிழே அறியாத அந்த நடிகை
சொல்லும் "ஏன் யணிய போன்கள் வழ்த்துக்கள்"..

இதற்கு மத்தியில் ஒரு தொலைக்காட்சி மட்டும்
உண்மையான அர்த்தம் அறிந்து
கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது!!..

அனைவருக்கும் உங்கள் தோழி திவ்யாஹரியின்
இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

Tuesday, January 12, 2010

நமக்கும் எப்போது?


நமக்கும் எப்போது?

எல்லா சுபயோக சுபதினத்திலும்

ஏதாவதொரு நட்ஷத்திரத்தில் அமைந்த

ஏதாவதொரு நல்வேளையில்

பெரியோர்கள் கூடி

திருமணங்களை நிச்சயித்துக்

கொண்டுதானிருக்கிறார்கள்..

நமக்கும் எப்போது?


வசந்தத்தை எதிர்நோக்கி..

பல பருவங்களையும் எதிர்பார்த்து தான்

காலமும், நேரமும்

மனிதர்களும், விலங்குகளும்

மரங்களும், மலைகளும் காத்திருக்கின்றன..

ஆனால் அன்பே நானோ..

உன் புன்னகையால் எனக்கு வரும்

வசந்த காலத்தை மட்டுமே எதிர்பார்க்கிறேன்..


நிவாரணம்..

செத்துக் கொண்டிருக்கும்

நம் உணர்வுகளுக்கு

உன் டெலிபோன்

முத்தம் தான்

..ஒரே நிவாரணம்

என்ன கொடுமை சார் இது?


சாதாரணமாக (ஒரு பெண்ணாக இருந்தும்) எனக்கு நாடகம் பிடிக்காது.. அதிகமாக அழ மட்டுமே வைப்பதால்.. நான் சாப்பிட எப்போதும் இரவு 10 மணிக்கு தான் போவேன்.. என்னுடன் என்னவரும் சாப்பிடும் போது (அவருக்கும் நாடகம் பிடிக்காது என்பதால்) ஜோக்ஸ் சேனல் தான் பார்ப்பது வழக்கம்.. இன்னிக்கு என் நேரம் என்னவருக்கு night shift. என் அத்தை நாடகம் பார்க்கும் போது சாப்பிட போய் விட்டேன்.

சன் டிவியில் 10 மணிக்கு ஒரு நாடகம் பார்க்க நேர்ந்தது.. ஒரு பெண் வெளியில் நின்று பழைய பேப்பர் வாங்கும் நபரிடம் பேசிக் கொண்டு இருக்கிறாள்.. அதை உள்ளிருந்து பார்த்த அவளோட புருஷன் அந்த நபரிடம் "என்ன பேசிகிட்டு இருந்த என் பொண்டாட்டிகிட்டன்னு கேட்டு.. கூடவே உன்னை தப்பா நினைக்கல.. அவ மோசமானவன்னு" சொல்றான்.. கடவுள் புண்ணியத்துல கேபிள் cut .. நான் தெரியாம தான் கேட்குறேன்.. 4 வருஷம், 5 வருஷம்ன்னு சீரியல் எடுக்குறீங்க.. கடைசி 2 நாளுல அந்த கொடுமைக்கார புருஷன் திருந்துற மாதிரிகாட்டுறீங்க..

4 ,5 வருஷம் பார்த்தது மக்கள் மனசுல பதியுமா?
2 நாள் பார்த்தது மக்கள் மனசுல பதியுமா?

நாங்க (நான் இல்லைங்க. என்னை மாதிரி வீட்டுல இருக்குற பெண்கள்.. வேலை கிடைக்காம, வேற பொழுது போக்கு இல்லாம இருக்கும் ஆண்கள்..) உங்ககிட்ட என்ன எதிர்பார்த்து டிவி முன்னாடி உட்காருறோம் தெரியுமா? அவன், அவனுக்கு வீட்ல ஆயிரம் பிரச்சனை அதை மறக்க தான் உட்காருறோம்.. அதை விட பெரிய கொடுமையை பார்க்க நேர்ந்தால் எப்படிங்க? அழுதால் தான் பார்ப்போம்னு நாங்க சொல்லல.. வேற வழி இல்லாம பார்க்கிறோம்.. யாராவது, எந்த குடும்பமாவது சந்தோஷமா இருக்குற மாதிரி காட்டினால் தானே பார்ப்பவர்களின் மனசும் லேசாகும்.. இப்படி கூட வாழலாம்ன்னு தோணும்.

நீங்க அழறத பார்த்து, அழவே இவ்வளோ பேர் இருக்கும் போது நீங்க சிரிச்சா சிரிக்காமலா போய்டுவாங்க.. அதுக்காக மொக்க ஜோக்லாம் போட்டு சாகடிக்க வேண்டாம்.. N .S .K . மாதிரி சிரிப்போட சிந்தனையையும் சேர்த்து கொடுங்க.. ஒரு புருஷன் பொண்டாட்டிய எப்படி வச்சிக்கணும்னு எடுங்க.. ஒரு தந்தை எப்படி இருக்கணும்ன்னு உதாரணம் காட்டுங்க.. ஒரு குழந்தை எப்படி வளரணும்னு காட்டுங்க.. கண்டிப்பா நல்ல ரிசல்ட் கிடைக்கும்..

ஏதோ சொல்லணும்னு தோணுச்சி.. தப்பா ரைட்டான்னு வோட்டுகளிலும் பின்னூட்டத்துலயும் சொல்லுங்க.. ரொம்ப திட்டிடாதிங்க.. ஏனெனில் இதான் நான் எழுதின முதல்.. முதல்.. முதல்.. (பாருங்க எப்படி சொல்றதுன்னு கூட தெரியாம முழிக்கிறேன்).. "சீரியல் பற்றிய கருத்துன்னே" வச்சிக்கலாம்.. நன்றி..

Monday, January 11, 2010

2009 போனால் என்ன? 2010 வந்தால் என்ன?


துளிர்க்கலாம்..

பூக்கலாம்..

உதிரலாம்..

மரம் நிரந்தரம்;
மழையும்..

எனக்குள்
நீயும்!!..

போதும்!! போதும்!!


உன் கண்ணால்
காதலை கற்றேன்..

உன் உதட்டால்
மென்மையை கற்றேன்..

உன் நாவால்
கனிவை கற்றேன்..

உன் சிரிப்பால்
அழகை கற்றேன்..

உன் பேச்சால்
ரசிப்பை கற்றேன்..

உன் அன்பால்
நாணத்தை கற்றேன்..

போதும்.. போதும்..
நீ கற்றுக் கொடுத்தது.. -உன் பிரிவையும்
கற்றுக் கொடுக்க முயலாதே..
கற்க என்னால் முடியாது!!..