Tuesday, July 20, 2010

ரஜினி, கமல் இதை செய்வார்களா?..

நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்தாலே போதும், எந்த நடிகரும் நடிப்பில் கலக்கலாம்.. பன்ச் டயலாக் பேசி, நடித்து, தற்பெருமை பேசிக்கிற படம் தான் இப்போ அதிகமா வருது. ஒன்னு அவனே "நான் நெருப்பு சீண்டாதன்னு" சொல்லிக்கிறான். இல்லேன்னா வில்லன் "அவன் சாணக்கியன்டா, சத்திரியன்டா"ன்னு கத்துறான். இதையும் விட்டா "ஏய்... ஏஏய்ய்... ஏஏஏய்ய்ய்..."ன்னு கத்தியே முழு படத்தையும் ஒட்டிடுரானுங்க.

இதை தவிர வேற யோசிக்கவே தெரியாதான்னு பார்த்தா, தெரியுமேன்னு காட்டுகிற மாதிரி ஒரு சில நல்ல படங்களும் வந்துகிட்டு தான் இருக்கு. இங் இருக்குற இயக்குனர்கள் எல்லாம் ஒழுங்கா கதையை மட்டும் யோசிச்சி (கதாநாயகர்களை நெனக்காம) கதை எழுதுனா, அது கண்டிப்பா நல்ல படமா தான் இருக்கும்னு நெனக்கிறேன்.

எந்த ரசிகன் இந்த படத்துல வர்ற நாயகி புடவை கட்டிக்க கூடாதுன்னு சொல்றான்னு தெரியல..? இல்லை எவனாவது "அந்த நடிகை ரைகுறையா வந்தாதான் பார்ப்பேன்னு" சொல்றானா? "பில்லா" நயன்தாரா மாதிரியும் "சிங்கம்" அனுஷ்கா (என் இதயம் பாடலில்) மாதிரியும் உடை போடும் அவசியம் என்ன? இப்படி இருந்தா தான் படம் ஓடும்னு சொன்னா. "அங்காடி தெரு" ஏன் ஹிட் ஆச்சி? "காதல்" ஏன் ஹிட் ஆச்சி?


படத்துக்கு தேவை பன்ச் டயலாக்கும், அரைகுறை உடையும் தேவையில்லை நல்ல கதை என்று சொல்லும் படங்கள் தானே இவை? ஒரு நடிகன் கதையை மாற்றி, தனக்கு பஞ்ச டயலக் பேச வசதி பண்ணிக்க முடியுதுன்னா அவனே, அந்த இயக்குனர்கிட்ட பேசி நடிகையை நல்ல விதமா உடை உடுத்த செய்யலாம் இல்லையா?ரஜினி, கமல் சொன்னா தமிழ்நாடு
முழுதும் எல்லா ரசிகர்களும் கேட்குறாங்கன்னு பெருமையா சொல்லிக்கிறோம். அவங்க இல்லன்னா சினிமா உலகம் என்ன ஆகும்னு தெரியலன்னு மேடைல எல்லாரும் சொல்றாங்க. இவ்ளோ வாய்ஸ் உள்ளவங்க ன் கூட நடிக்கிற நடிகை உடையை ஒழுங்கா உடுத்தணும்னு ஏன் சொல்ல மாட்றாங்க?

தமிழ் சினிமா
உலகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகணும்னு பேசுற இவங்களோட படம் கவர்ச்சி இல்லாம இருக்குமா? இல்லையெனில் ஆடை குறைப்பு விஷயத்துல தான் அடுத்த கட்டத்துக்கு போக சொல்றாங்களா? புரியலைங்.

அரைகுறையாய் பார்த்து, பார்த்து சலிச்சி போச்சி.. புடவை, தாவணி போட்டு நடிக்க சொல்லலைங்க.. போடுற ட்ரெஸ்ஸ கொஞ்சம் ஒழுங்கா போடுங்கன்னு தான் சொல்றேன்.. அதே "சிங்கம்" படத்துல படம் முழுக்க கதாநாயகி "சுடி" தான் போட்டுட்டு வராங்க. அது எவ்ளோ அழகா இருக்கு. pant, t-shirt கூட போடலாம். அசிங்கமா இல்லாம போட்டா
சரிதான். அக்கம் பக்கத்து நாட்டுக்காரங்க உலகமே பார்க்கிற மாதிரி படம் எடுக்க முயற்சி செய்றாங்க. நாம இப்போ தான் கொஞ்சம், கொஞ்சமா முயற்சி பண்றோம். ஆயிரத்தில் ஒருவன், இராவணன், மதராச பட்டினம் மாதிரி இன்னும் சில படங்கள்..
மதராச பட்டினம் படம் பார்த்தேன். ரொம்ப நல்ல காதல் கதை. அதை அழகா சொல்லியிருக்கிற இயக்குனருக்கு பாராட்டுக்கள். வெளிப்படுத்திய ஏமி, ஆர்யாவுக்கு பாராட்டுக்கள். பழைய படத்துல எல்லாம் எத்தனை பேர் இருந்தாலும், அவங்க எல்லாருமே கதைக்கு ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுவார்கள். அதை போன்று இந்த படத்துலயும் எல்லாரையும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இதுல ஒரே ஒரு குறை தான் எவனும், "வாவாவாடாடாடாடா..." ன்னு கத்தல. ஆனால் அந்த படத்த ஒரு முறை பார்
ப்பதற்கு பதிலா மதராச பட்டினத்தை பலமுறை பார்க்கலாம். "மதராச பட்டினம்" படத்த பார்த்துட்டு எவனும் சீரியஸா இருக்கான்னு sms வராது. அதுக்கு நான் கேரன்ட்டி. தியேட்டர்க்கு போய் படத்த பாருங்க. இந்த மாதிரி படங்களை நாம ஆதரிச்சா தான் தமிழ் சினிமா உலகம் அடுத்து கட்டத்துக்கு நகரும். தப்பா இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க.

டிஸ்கி
: சிங்கத்துக்கும், அசிங்கத்துக்கும் ஒரு எழுத்து தாங்க வித்தியாசம். ஒரு படம், "சிங்கம் ஆவதும் அசிங்கம் ஆவதும்" இயக்குனர்ள், நடிகர்ள் கைல தான் இருக்கு. (கடைசில என்னையும் டயலக் பேச வச்சிட்டீங்களே. என்ன கொடுமை சார் இது?)

Thursday, July 8, 2010

ஜெய்லானி விருது..


மறுபடியும் விருது கொடுத்த ஜெய்லானிக்கு நன்றிகள் பல.. கண்டிப்பா அடுத்த விருது வாங்கும் அளவுக்கு இனி முயற்சி செய்வேன். இந்த விருதை என் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க விரும்புகிறேன்.. என் இனிய நண்பர்கள் அனைவரும் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.. (ஜெய்லானி.. உங்களை மாதிரி எல்லாருடைய பெயரையும் எழுதி.. லிங்க் கொடுத்து.. டைம் தான் வேஸ்ட்? எப்படி என் ஐடியா?) நீங்களும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Tuesday, July 6, 2010

அனைவரும் நலமா?


வணக்கம் நண்பர்களே..

அனைவரும் நலமா? இவ்வளவு நாட்கள் நேரமின்மை காரணமாக பதிவெழுத முடியவில்லை.. இனி (நேரம் கிடைக்கும் பொழுது) தொடர்ந்து எழுதுவேன்.. முன்பு போல உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தின் மூலம் தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன்.. ..


உங்கள்
தோழி.. திவ்யாஹரி..

Wednesday, March 31, 2010

முந்தைய பதிவின் முடிவு..


இதற்கு முந்தய பதிவை படிக்காதவங்க படிச்சிட்டு வாங்க.. தில் இருந்தா.. ஹி.. ஹி.. முந்தய பதிவில் சஸ்பென்ஸ் வைக்கும் எண்ணம் இல்லை. இடம் பற்றாத காரணத்தால் அதை பாதியிலேயே முடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு.

அந்த பெண்ணிடம் கல்யாணம் பற்றி, காதல் பற்றி அறிவுரை சொன்னதும்.. கடைசியாக நடந்த உரையாடல்..

அந்த பெண்: ராஜா என்னை ரெண்டாவதா திருமணம் பண்றதை எதிர்க்குறீங்களா..

நான்: அப்போ புருஷன விட்டுட்டு வரியா?

அந்த பெண்: அது முடியாது. ரெண்டு பேருமே வேணும். (இதுதான் அவள் நினைப்பது)

நான்: நீ குழப்பத்துல இருக்க.. அதனால அவனையும் சேர்த்து குழப்புற. இரண்டாவதா கல்யாணம் பண்ணலாம். தப்பு இல்ல. ஆனா அதுக்கு முதல் புருஷன் குடிகாரன், கொடுமைக்காரன், இல்லை சந்தேகப்பட்டே சாகடிக்கிறவன் இப்டி ஏதாவது ஒண்ணு பண்ணனும். அட்லீஸ்ட் உனக்கு பிடிக்காமயாவது இருக்கணும். எதுவுமே இல்லாத பட்சத்தில், அவனை விட்டுபோக நீ நெனக்கிறது சரி இல்லை. உன் புருஷன் உன்னை கட்டியத தவிர வேற என்ன தப்பு பண்ணாரு. இந்த விஷயம் தெரிஞ்ச அவர் துடிச்சி போக மாட்டாரா? உனக்கும், உனக்கு பிறக்கப் போற குழந்தைக்கும் தான சம்பாதிக்க போய் இருக்காரு. ராஜா இன்னிக்கு இந்த படம் பார்த்துட்டு, 2 பேரை காதலிச்சி பார்க்குறவன் நாளைக்கு வேற படம் பார்த்து உன்னை விட்டுட்டு போயிட்டான்னா என்ன பண்ணுவ?

அந்த பெண்: அதான் அக்கா எனக்கும் சந்தேகமா இருக்கு. அதனால தான் நேத்து சண்டை போட்டுட்டு வந்தேன். ஆனா இன்னிக்கு கோபம் இல்லை. அவன் எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும்.

நான்: சரி உன் இஷ்டம். நல்ல வாழ்க்கை கிடைச்சும் அருமை புரியாம கெடுத்துக்க போற. அவ்ளோ தான். இனி இது விஷயமா என்கிட்டே வராதிங்க.
இதுக்கு பேர் மட்டும் காதல்னு சொல்லிட்டு திரியா.. காதலுக்கே கேவலம்.. good bye.

ராஜாவிடம் நான்: (அந்த பொண்ணு மனசுல உள்ளதை முழுவதும் சொல்லி) கல்யாணம் ஆன பிறகு தொல்லை பண்ண கூடாதுடா. அவளுக்கு ரெண்டு பேருமே வேணுமாம்டா. புரிஞ்சிக்கோ. உனக்கு வேற பொண்ணு கிடைக்கும். அவளை மறந்துடு. அந்த பொண்ணோட புருஷன் வந்தபின் பொண்டாட்டி இப்டி என்று பேச்சு வந்தால் தாங்க மாட்டார்டா.. பாவம்டா அவரு.
அதோட இன்னிக்கு தன் புருஷன் வெளிநாடு போயிட்டான்னு மாறிட்டா. நாளைக்கு நீயும் வெளிநாடு போவ.. நெனப்பு வச்சிக்கோ.

ராஜா: அதை பத்தி எனக்கு கவலை இல்லை. யார் என்ன சொன்னாலும் கட்டுனா அவளை தான் கட்டுவேன். இல்லேன்னா கல்யாணமே வேண்டாம்.

நான்: ரொம்ப சந்தோசம்.. எக்கேடும் கேட்டு போங்க. இனி இது விஷயமா நான் ஏதும் தலையிட மாட்டேன்.. அக்கானு சொல்லிட்டு, தொலைபேசியில் தொல்லை பண்ணாத. good bye.

அதன்பின் அவங்க அம்மா 15 நாள் கழித்து தொலைபேசியில் அழைத்தார்கள். அவனை பற்றி புலம்பினார்கள். இன்னமும் அப்டியே தான் அலையிறானாம் அவள் பின்னாடி.

இங்கு அவளால் அவன் கெட்டானா? அவனால் அவள் கெட்டாளா? ஒன்று மட்டும் நிச்சயம். இவர்களால் அந்த பெண்ணின் புருஷன் வாழ்க்கை போனது. வெளிநாடு செல்லும் சில ஆண்களின் வாழ்க்கை இப்டி கூட கேட்டு போகுதுங்க. பாவம்..

காதல் தப்பு இல்லை. விண்ணைத் தாண்டி வருவாயாவில் த்ரிஷா மாதிரி காதல் இருந்தும், ஏத்துக்கவும் முடியாம, மறுக்கவும் முடியாம இருக்குறது கூட காதல் தான்.. இது காதலா? எனக்கு புரியல.

எனக்கு பதிலாக நீங்கள் சொல்லுங்கள் நண்பர்களே..


எனக்கு தெரிந்த ஒரு பையன் ராஜா. சிறு வயதில் இருந்தே பொறுப்புள்ளவன்.. பாசமிக்கவன். நான்காம் வகுப்பு படிக்கும் போதே அன்னைக்கு உடல் நலமில்லை என்றால், தானே தண்ணி எடுத்து, பாத்திரம் விளக்கி, துணி துவைத்து என அனைத்து வேலைகளையும் செய்து விடுவான். ஏழாம் வகுப்பு படிக்கும் போது சமைக்கவும் செய்தான்.

கிராமத்தில் உள்ள மற்ற பசங்களை விட இவன் நல்லா இருப்பான். அதனால் கிராமத்திற்கே உரிய கிண்டலில் பெண்கள் அவனை எப்போதும் சுற்றிச் சுற்றியே வருவார்கள். இவனோ யாரிடமும் நின்று பேச கூட மாட்டான். காதல் பற்றி நினைத்தது கூட இல்லை. எட்டாம் வகுப்பு படிக்கும் போது அவனை சுற்றி வந்த பெண்ணில் ஒரு பெண்ணை விரும்ப ஆரம்பித்து விட்டான். அடுத்த சில வருடங்களில் அவனின் குடும்ப சூழ்நிலை காரணமாக அவனை படிப்பை நிறுத்தி.. வெளிநாடு அனுப்பி வைத்தனர் அவன் பெற்றோர்.

வெளிநாடு சென்றும் காதல் தொடர்ந்துள்ளது. முதல் இரண்டு வருடங்கள் பேசிக்கொண்டிருந்த அந்த பெண், பின் "தொடர்பு எல்லைக்கு வெளியில்" போனாள்.. யாரிடமும் விசாரிக்க இயலாத நிலையில், தன் காதலை நம்பி வாழ்ந்து வந்தான் ராஜா.

அதன்பின் 3 வருடம் கழித்து ஊர் திரும்பியவன் 1 மாதத்திற்கு பிறகு எனக்கு போன் செய்தான். நான் எப்போதும் போல "எங்கடா இருக்க" என்று கேட்க "சுடுகாட்டுல இருக்கேன்" என்று சொன்னான்.. எனக்கு ஒன்றுமே புரியல. "என்னடா ஆச்சி" என்றால், "நான் லவ் பண்ணவ என்னை ஏமாத்திட்டா அக்கா" என்றான். இவ்ளோ வருஷம் "i love u" சொன்னவ இன்னிக்கு "i hate u" சொல்லிட்டு போயிட்டா அக்கானு புலம்புறான். அவனை தேற்றி, வீடு திரும்ப வைக்க நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்.

அந்த குழப்பத்திலும் அந்த பெண்ணின் நம்பரை வாங்கிக் கொண்டு, அவனிடம் ரொம்ப நேரம் கெஞ்சி, அறிவுரை வழங்கிய பிறகுதான் வீட்டுக்கு போக சம்மதித்தான். எப்போதோ "காதலிக்கிறேன்" என்று கூறிய பெண்ணை இன்றும் ராஜா காதலிப்பது எனக்கு கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. மறுநாள் விடிந்ததும் அந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து என்ன விவரம் என்று கேட்ட பின் தலை சுற்றியது எனக்கு.. இதை படித்த பின் உங்களுக்கும்..

நடந்தது இது தான். ராஜா வெளிநாடு சென்ற இரு வருடத்திற்கு பிறகு அவளுக்கு திருமணம் நடந்து விட்டது. திரும்பி வந்த ராஜா அந்த தோல்வியை கூட அவளிடம் வெளிப்படுத்தாது ரொம்ப நாகரிகமாக நடந்துள்ளான். எங்கேயாவது பார்க்க நேர்ந்தால் கூட காதலை நினைவுபடுத்தாது சாதாரணமாக பேசியிருக்கிறான்.

ஏற்கனவே ராஜாவின் நல்ல குணம் அந்த பெண்ணுக்கு தெரிந்திருந்தாலும்.. காதலி ஏமாற்றியதை கூட பொறுத்து கொள்ளும் அவன் மனம், இவளை தடுமாறச் செய்ததால், மீண்டும் ராஜாவிடம் "உன்னை நான் இப்போதும் காதலிக்கிறேன்" என்று உளறி வைத்துள்ளாள். அத்தோடு அந்த பெண்ணின் கணவன் வெளிநாடு சென்றுள்ளதாகவும், வரும் போதெல்லாம் எதிர்த்து பேசினால் அடிப்பார் என்றும் (கவனிக்கவும் வேறு எதற்காகவும் அடித்ததில்லையாம்) சொல்லியிருக்கிறாள்.

ராஜா உடனே கஷ்டப்படும் அவளுக்கு ஆறுதல் அளிக்கிறேன் பேர்வழி என்று "நானே உன்னை கட்டிக்கிறேன்" என்று சொல்லி, மீண்டும் தொடர்ந்தது இவர்களின் காதல் தொலைபேசியில்..

இதற்கு பின் ராஜா "திருந்தாத ச்சீ.. தீராத விளையாட்டு பிள்ளை" பார்த்து விட்டு, "எனக்கு எதிலும் best வேணும்" என்று ஆரம்பித்து அவன் பின்னால் சுற்றிய இருவரை, ஒரு வாரம் காதலித்து பார்த்து விட்டு, இவளிடம் நடந்ததை விளக்கி "நீ தான் best-ன்னு" சொல்லி மறுபடியும் பெருமையாய்(?) "I love u" சொல்ல, அந்த பெண் "i hate u" என்று ஓடியே போய்விட்டாள்.. இதுக்கு தான் நம்ம தம்பி சுடுகாட்டுல வந்து படுத்துக்கிச்சி..

நீ இன்னும் ராஜாவை காதலிக்கிறியான்னு அந்த பொண்ணுகிட்ட கேட்டதுக்கு "ஆமா"ன்னு வேற சொல்லுது.. புருஷன் வேணுமா, ராஜா வேணுமான்னு கேட்டா, ரெண்டு பேரும் வேணும்னு சொல்லுது அந்த லூசு. அவன்கிட்ட, "கல்யாணம் ஆகிடுச்சின்னா தொல்லை பண்ண கூடாதுடா விடுடா"ன்னு சொன்னா, "கட்டுனா அவளை தான் கட்டுவேன்னு" ஒத்தை காலுல நிக்கிறான்.

இதுக்கு நான்
ரெண்டு பேர்கிட்டயும் என்ன பதில் சொல்லிருப்பேன்?.. நான் என்னை சொன்னேன்னு அடுத்த பதிவில் சொல்றேன்.. நீங்க என் இடத்தில் இருந்தால் அவங்களுக்கு என்ன சொல்லி இருப்பீங்கன்னு மட்டும் சொல்லுங்க.. நிறைய பேர் இப்படி தான் "எது வாழ்கைன்னு" தெரியாம தடுமாருறாங்க.. அவங்களுக்காக நாம பேசுவோம்..

Monday, March 29, 2010

கிடைச்சிடுச்சி.. கிடைச்சிடுச்சி..


நண்பர்களே.. எனக்கு விருது கிடைச்சிடுச்சி.. நண்பர் ஜெய்லானி அவர்கள் தனக்கு கிடைத்த விருதை எங்களுடன் பகிர்ந்து இருக்கிறார்.. இது என் முதல் விருது.. மிக்க நன்றி ஜெய்லானி..

நானும் சில நண்பர்களுக்கு விருது கொடுக்க நினைக்கிறேன்.. பெற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே!!

கண்ணா
பித்தனின் வாக்கு
பிரியமுடன் வசந்த்
புலவன் புலிகேசி
மோகனன்
ஸ்ரீராம்
கவிதை காதலன்
சைவக்கொத்துப்பரோட்டா
சும்மா
சிவாஜி சிறகுகள்
சங்கவி
என் எண்ணசிதறல்கள்
என் நடை பாதையில் ராம்
முகிலன்
மங்குனி அமைச்சர்
க.பாலாசி

அப்புறம் எனக்கு விருது கொடுத்த நண்பர் ஜெய்லானிக்கும்..
இவர் எனக்கு கொடுத்ததற்காக இல்லைங்க.. இவரின் பதிவுகளுக்காக..

Sunday, March 28, 2010

பிளாஸ்டிக் உபயோகத்தை தடுப்போம்..

சென்னைக்கு தங்கை வீட்டுக்கு சென்று வந்தேன்.. தங்கை புதிதாக இருசக்கர வாகனம் (scooty pep+) வாங்கியுள்ளதால் என்னை வண்டியில் அழைத்து செல் ஆசைப்பட்டாள்.. "போய் தான் பார்ப்போமே" என்று வண்டியில் சந்தோஷமாகத்தான் ஏறி உட்கார்ந்தேன்.. அவள் இருக்கும் தெருவை விட்டு வண்டி மெயின் ரோடுக்கு வந்தது.. அதுவரை பயந்த நான், இனி ரோடு நல்லா இருக்கும்.. ஜாலியா போகலாம்னு நெனச்சேன்.. ஏன்டா போனோம்ன்னு ஆகிடுச்சி அந்த பயணம்..

இது வரை சென்னை நகரி
ல் எங்கு சென்றாலும், பஸ்சில் மட்டுமே சென்று வந்ததால் வண்டி ஓட்டுபவர்களின் சிரமம் எனக்கு தெரிய வாய்ப்பில்லை.. பிளாஸ்டிக் பையை (carry bag) என்னென்ன காரணத்துக்காக பயன்படுத்தக்கூடாதுன்னு சொல்றாங்களோ தெரியல.. ஆனா ஒரே ஒரு காரணத்தை அன்று உணர்ந்தேன்..

நாங்கள் இருவரும் சிக்னலில் நிற்கும் போது, எங்
கயோ கிடந்த பிளாஸ்டிக் பை ஒண்ணு தூரத்துல பறந்து வந்தது.. என் தங்கையிடம் சொல்லி எச்சரிக்கையாக இருக்க சொன்னேன்.. ரொம்ப தூரத்துல பறந்துகிட்டு இருந்ததால தங்கை, "அதெல்லாம் இவ்வளவு தூரம் பறந்து வராதுன்னு" சொன்னாள்.. நான் உடனே, "வராது தான்.. இருந்தாலும் எதற்கும் தயாரா இரு.. நாம சிக்னலில் இருந்து வண்டியை எடுத்ததும் உன் பக்கம் வந்தா வண்டியை பதட்டப்படாமல் நிறுத்தி விடுன்னு" சொன்னேன்.. நினைத்தது போலவே அது பறந்து எங்கள் பக்கம் தான் வந்தது.. வண்டியை தங்கையும் நிறுத்தி விட்டாள்..

எங்களை
முந்திச் செல்ல வந்த ஒருவரின் முகத்தில் வந்து ஒட்டிக் கொண்டது.. அவர் சற்று வேகமாக வந்ததால் தடுமாறி விழ பார்த்தார்.. சட்டென்று பையை எடுத்துவிட்டு வண்டியை நிறுத்தி விட்டார். ரொம்ப பயந்துட்டார்.. நாங்களும்தான்.. நம்ம பதிவுலக நண்பர் "புலவன் புலிகேசி" சில நாட்கள் முன்னர் ஒருபட்டம் பறந்து வந்து முகத்தில் பட்டதால் விபத்து ஏற்பட்டதாக ஒரு பதிவில் டரியல் (06-மார்ச்-2010) கூறியிருந்தார்.. எனக்கு உடனே அதுதான் நினைவிற்கு வந்தது..

வண்டியில் வந்தவர் கொஞ்சம் நிதானிக்காவிட்டால் இன்று அவரின் கதி என்ன? அவர் குடும்பத்தின் கதி என்ன? மக்கள் தான் பொறுப்பாக இல்லையென்றால், அரசும் கூட ஏன் இதை பொறுப்பாக தடுக்க கூடாது? "தலைக் கவசம் அவரவர் உயிர்க்கு தான் பாதுக்காப்பு" என்றாலும் கூட மக்கள் அதை பின்பற்றுவதாயில்லை.. இங்கு எதையுமே அன்பாகவும், அறிவுரையாகவும் சொல்வதால் எந்த பயனும் இருப்பதில்லை.. தனக்கு என்று வரும் போது மட்டுமே அதை பற்றி நினைக்கிறார்கள்.. ஆனால் அப்போதும் மற்றவர்களை குறைசொல்லி அலைகிறார்கள்..

"தலைக் கவசம் போடாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்" என்று சொன்னதும்தானே, மக்கள் அதை வாங்கி அணிந்து கொண்டார்கள்? அன்பும், அறிவுரையும் செய்யாததை, கட்டணம் செய்கிறது.. இதையும் கட்டணத்தின் துணையை
கொண்டுக் கட்டுப்படுத்தலாமே.. பிளாஸ்டிக் பையை மட்டும் இல்லாமல் பிளாஸ்டிக் பொருட்களையே கட்டுப்படுத்தலாமே.. அவரவர் கடமையை செய்யக் கூட லஞ்சம் கொடுத்து பழக்கப்பட்ட மக்கள் தானே.. இதற்கும் கொஞ்சநாள் கொடுத்து விட்டு, திருந்தி விடுவார்கள் என்று நம்புவோம்!!..