Tuesday, May 1, 2012

உண்மையாக கஷ்டப்படுபவர்கள் யார்?


ஒரே நேரத்தில் என்னுடைய இரண்டு கைக்கடிகாரமும் காணமல் போய்விட்டது. ஒன்று எங்க அப்பா வாங்கி தந்தது. இன்னொன்று என் கணவர் ஹரி வாங்கி தந்தது. எங்க அப்பா வாங்கி தந்த கைக்கடிகாரம் கிடைத்து விட்டது. ஹரி வாங்கி கொடுத்தது கிடைக்கல. எங்க அப்பா எனக்கு வாங்கி கொடுத்த கைக்கடிகாரம் கிடைத்ததும் நான் என் ஹரிகிட்ட பேசியவை தான் இந்த பதிவு.

நான்: அப்பாடா.. அப்பா வாங்கி கொடுத்த வாட்ச் கிடைச்சிடுச்சி. எங்க அப்பா கஷ்டப்பட்டு உழைச்ச காசு. நல்லவேலை கிடைச்சிடுச்சி..
ஹரி: (கிண்டலாக) அப்ப நான் மட்டும் என்ன கொள்ளை அடிச்சிட்டா வந்தேன்? நானும் ஆபீஸ்க்கு போய் கஷ்டப்பட்டு தான் சம்பாதிக்கிறேன்..
நான்: இருந்தாலும் எங்க அப்பா குழந்தைங்ககிட்ட கத்திக் கத்தி, (ஆசிரியர்) தொண்டைத் தண்ணி வற்ற கஷ்டப்பட்டு சம்பாதிச்சது.
ஹரி: அப்படி பார்த்தா உங்க அப்பா எல்லாரையும் திட்டித் திட்டி சம்பாதிச்சாங்க.. நான் எல்லார்கிட்டயும் திட்டு வாங்கி (TNEB/JE) சம்பாதிக்கிறேன்!!! இப்போ சொல்லு யார் வேலை கஷ்டம்???
நான்: உங்க நிலைமை கொஞ்சம் பாவம்தான்ப்பா..