Tuesday, December 22, 2009

நீ..


உன் நெஞ்சினிலே தலைசாய்த்து..
பஞ்சுக் கைகளை கோர்த்து..
அரை நிமிடம் உறங்கினாலும்..
ஆயுள் வரை கிடைக்காது வேறொரு இன்பம்!!!..

நீ குளித்து விட்டு வரும் பொழுது..
கலைந்து அதனதன் இஷ்டத்திற்கு
கிடக்கும் உன் தலை முடிகள்..
அடடா... அதை ரசிக்க மட்டுமே
வேண்டுமொரு ஜென்மம்!!!..

ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள்
தீவிரவாதியாம் - உன் கைகளையும்
சிரிப்பையும் வார்த்தைகளையுமே பயன்படுத்தி
எனை வீழ்த்துகிறாயே உனக்குத் தான்
என்ன பெயர் வைப்பது!!!..

21 comments:

என் நடை பாதையில்(ராம்) said...

நல்ல ரசனை....
ஓட்டுப் பட்டையை இணையுங்கள்....

புலவன் புலிகேசி said...

காதல்வாதின்னு வைங்க...அப்பறம் ஓட்டுபட்டை இணைப்பதை இன்று மதியம் பன்னிடலாம்...நேத்து கொஞ்சம் வேலை...

கண்ணா.. said...

அட... அடுத்த கவிதையா......


ஹரி இதை படிச்சிட்டு என்ன சொன்னார்.?

ஓட்டு பட்டையை சீக்கிரம் இணையுங்கள்

திவ்யாஹரி said...

என் நடை பாதையில்(ராம்) said...

நல்ல ரசனை....
ஓட்டுப் பட்டையை இணையுங்கள்....

பின்னூட்டதிற்கு நன்றி ராம்.. இன்று மதியம் இணைத்து விடுவோம் என்று நண்பர் சொல்லி இருக்கிறார்.. விரைவில் இணைத்து விடுகிறேன்.

திவ்யாஹரி said...

புலவன் புலிகேசி said...

காதல்வாதின்னு வைங்க...அப்பறம் ஓட்டுபட்டை இணைப்பதை இன்று மதியம் பன்னிடலாம்...நேத்து கொஞ்சம் வேலை...


காதல்வாதி நல்ல பெயர் புலவரே.. பின்னூட்டதிற்கு நன்றி.. மதியம் ஆன்லைன் வருகிறேன் நண்பா..

திவ்யாஹரி said...

கண்ணா.. said...

அட... அடுத்த கவிதையா......

ஹரி இதை படிச்சிட்டு என்ன சொன்னார்.?
ஓட்டு பட்டையை சீக்கிரம் இணையுங்கள்

ஹரிக்கும் என் கவிதைகள் பிடிக்கும் கண்ணா... அவரும் ரசித்தார்.. மதியம் இணைத்து விடுகிறேன் நண்பா..

kunthavai said...

//ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள்
தீவிரவாதியாம் - உன் கைகளையும்
சிரிப்பையும் வார்த்தைகளையுமே பயன்படுத்தி
எனை வீழ்த்துகிறாயே உனக்குத் தான்
என்ன பெயர் வைப்பது!!!..

இப்படி எல்லாம் கவிதை எழுதி எங்கள மயக்குரீங்களே உங்களுக்கு என்ன பெயர் வைப்பது. (ஆபீஸ்ல ஒழுங்கா வேலை செய்ய விடமாட்டீங்களா?)

Priya said...

//ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள்
தீவிரவாதியாம் - உன் கைகளையும்
சிரிப்பையும் வார்த்தைகளையுமே பயன்படுத்தி
எனை வீழ்த்துகிறாயே உனக்குத் தான்
என்ன பெயர் வைப்பது!!!.. //.....நல்லா எழுதியிருக்கீங்க‌!

காதல் கசியும் ஆண்கள் எல்லாம் காதல் தீவிரவாதிகளே!

திவ்யாஹரி said...

kunthavai said...

"இப்படி எல்லாம் கவிதை எழுதி எங்கள மயக்குரீங்களே உங்களுக்கு என்ன பெயர் வைப்பது"

திவ்யாஹரியே போதும் தோழி..

"(ஆபீஸ்ல ஒழுங்கா வேலை செய்ய விடமாட்டீங்களா?)"

யாரை வேலை செய்ய விடமாட்டேன்னு சொல்றீங்க? உங்களையா ஹரியையா? பின்னூட்டதிற்கு நன்றி தோழி..

திவ்யாஹரி said...

Priya said...

"காதல் கசியும் ஆண்கள் எல்லாம் காதல் தீவிரவாதிகளே!"

வாங்க பிரியா.. காதல் தீவிரவாதியும் நல்லா தான் இருக்கு.. பின்னூட்டதிற்கு நன்றி..

அண்ணாமலையான் said...

இதயத்திருடன்னு ஏற்கனவே ஒரு நல்ல தமிழ் படத்தோட பேரு இருக்கே?

திவ்யாஹரி said...

அண்ணாமலையான் said...

இதயத்திருடன்னு ஏற்கனவே ஒரு நல்ல தமிழ் படத்தோட பேரு இருக்கே?

பின்னூட்டதிற்கு நன்றி நண்பா.

பின் வரும் கவிதை ஒன்றிற்கு அந்த பெயரை வைத்து விடுகிறேன்.. நன்றாக இருக்கிறது..

திவ்யாஹரி said...

ஓட்டு போட்டவர்கள் அனைவருக்கும் நன்றி..

கமலேஷ் said...

கவிதை அழகாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்..

திவ்யாஹரி said...

kamalesh said...

கவிதை அழகாக இருக்கிறது...

நன்றி நண்பா..

Paleo God said...

என்ன பெயர் வைப்பது ??? வைக்க முடியுமா என்ன ?? ஊர்ப்பட்ட கவிகள் மண்ணை கவ்விய இடமல்லவா அது ::))

திவ்யாஹரி said...

வருக நண்பா.. நீங்கள் சொல்வதும் சரி தான்.. பின்னூட்டதிற்கு நன்றி நண்பா..

அரங்கப்பெருமாள் said...

சூப்பரான காதல் கவிதை.அருமையாக உள்ளது.

ஸ்ரீராம். said...

புலிகேசி பக்கத்தில் உங்களைப் பற்றி படித்து விட்டு வந்தேன்.
மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள்...
ஆண்களைப் பற்றி பெண்கள் கவிதை எழுதுகிறார்களா என்ன.. அட!

திவ்யாஹரி said...

நன்றி அரங்கப்பெருமாள். தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள்..

திவ்யாஹரி said...

இதுவரையில் மனதினில் எழுதி வந்தோம். இனி வலைத்தளத்தில்.. நன்றி நண்பா.. தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள்..

Post a Comment