Tuesday, December 29, 2009

புலம்பல்கள்..


பேனாவும் பேப்பரும்
கிடைத்தால் கிறுக்கத் தானே
தெரியும் எனக்கு -எப்போதிலிருந்தடா
எழுதக் கற்றுக் கொண்டேன்?

எத்தனை நாள்.. எத்தனை முறை
முயன்றாலும்
கவிதை வரவில்லையடா
காதல் தான் வருகிறது உன்மீது!!..

உன்னை பற்றி எழுத
நினைத்ததென்னவோ
பக்கம் பக்கமாய்..
முடித்ததென்னவோ வெற்றுக் காகிதமாய்..

உனக்காக கவிதை எழுதி
உன்னை அசர வைக்கத்தான்
நினைத்தேன்.. தினமும்
முயன்று கொண்டே..
இன்னும் முடியவில்லை..

இவ்வாறு.. உன்னை பற்றி
கவிதை எழுத தோற்றுப்போய்
வெறும் புலம்பல்களோடே
முடிகிறது என் எழுத்துக்கள்..

18 comments:

புலவன் புலிகேசி said...

புலம்பலே இப்புடியா???அப்ப கவிதை எப்புடி இருக்கும்...அருமைங்க...

பிரேமி said...

உண்மையிலே மிகவும் அருமை உங்கள் கவிதை. வாழ்த்துக்கள்

கண்ணா.. said...

//இவ்வாறு.. உன்னை பற்றி
கவிதை எழுத தோற்றுப்போய்
வெறும் புலம்பல்களோடே
முடிகிறது என் எழுத்துக்கள்//

ஆனா உங்க கவிதைகளை பார்த்தா அப்பிடி தோற்றுப்போன மாதிரி தெரியலையே...........

அண்ணாமலையான் said...

எழுத்துக்கள் தோற்றாலும் எண்ணங்கள் வெற்றியடைந்ததே.. வேறென்ன வேனும்?

Paleo God said...

::))

ஸ்ரீராம். said...

காதல் வந்தாலே கவிதை வரணுமே...!
அதனால் என்ன காதலே கவிதைதானே...

திவ்யாஹரி said...

நன்றி நண்பா.. என்ன எழுதுறதுன்னு தெரியாம புலம்புனேன்.. அதையே பதிவிட்டேன் புலவரே..

திவ்யாஹரி said...

நன்றி சந்தோஷ்..

திவ்யாஹரி said...

நன்றி கண்ணா..

திவ்யாஹரி said...

அண்ணாமலையான் said...

எழுத்துக்கள் தோற்றாலும் எண்ணங்கள் வெற்றியடைந்ததே.. வேறென்ன வேனும்?

நன்றி அண்ணா..

திவ்யாஹரி said...

நன்றி பலாபட்டறை..

நன்றி ஸ்ரீராம்..

Anonymous said...

சந்தடி சாக்குல அது என்ன
எப்போதிலிருந்தடா...
வரவில்லையடா...
டா...டா....???

ஹரி நம்பர் என்ன, முதல்ல கம்ப்ளைன் பண்ணனும்...
(just for fun)

ரிஷபன் said...

இந்த அவஸ்தை வந்திருச்சா.. இனிமே கவிதை கொட்டும்.. நிறுத்தறது ரொம்ப கஷ்டம்..

திவ்யாஹரி said...

வார்த்தை உங்க பெயர் என்ன சொல்லுங்க. நம்பர் தரேன்.. மாட்டிக்கிட்டீங்களா? நன்றி நண்பா..

ரிஷபன் said...

இந்த அவஸ்தை வந்திருச்சா.. இனிமே கவிதை கொட்டும்.. நிறுத்தறது ரொம்ப கஷ்டம்..

அப்படியா? நன்றி ரிஷபன்..

Sathees said...

lyrics are good.But why don't you try to write a story.

Anonymous said...

//எத்தனை நாள்.. எத்தனை முறை
முயன்றாலும்
கவிதை வரவில்லையடா
காதல் தான் வருகிறது உன்மீது!!..

முடியல... ரெம்ப அருமையா எழுதுரீங்க

திவ்யாஹரி said...

thanx sathees.. i will try..

திவ்யாஹரி said...

நன்றி தோழி.. உண்மையாவே கவிதை வரல.. என்ன செய்யறதுன்னு தெரியல.. ப்ளாக்ல என்ன எழுதுறதுன்னு தெரியாம குழம்புறேன்.

Post a Comment