Thursday, December 31, 2009

வாழ்த்துக்கள் சொல்வது எப்படி?


வாழ்த்துக்கள் சொல்வது எப்படின்னு நான் விளக்கம் கொடுக்க வரலைங்க..
உங்ககிட்ட கேட்கிறேன்..
தெரிஞ்சவங்க சொல்லுங்க..
ஏதோ, எனக்கு தெரிஞ்சா மாதிரி சொல்லிருக்கேன்..
நண்பர்கள் வாழ்த்துக்களை ஏத்துக்கணும்..


எப்படி சொல்வது?..
கவிதையாக சொல்வதா?
இல்லை வெறும் வார்த்தையாக சொல்வதா?
இல்லை, கவிதை என்று
தலைப்பிட்டு தோன்றுவதை சொல்வதா?

இவ்வருடம் முடிந்து..
புது வருடம் தொடங்கும்
இவ்வேளையில் கவிதையாக
சொல்வதே சிறந்தது.

எனினும்..
எழுத யோசித்தால் காதலிக்குக்
கடிதம் எழுதுபவன் போல..
எழுதிய பக்கத்தை விட,
கிழித்த பக்கங்களே அதிகம் என்பதால்..

காகிதத்தை வீணாக்காமல்
கணிப்பொறியில் அமர்ந்து விட்டேன்..
எதையெழுதி பதிப்பதானாலும்
இதிலேயே செய்தால்..
திருத்தும் வேலை மட்டும் தானே..

இருந்தாலும்..
பரீட்சை எழுதும் மாணவன் போல
வெறும் காகிதத்தை 'மட்டுமே'
கொடுப்பதை விட சொல்ல வந்ததை
சொல்லிவிட்டு போகிறேனே!!..

நண்பர்களே,
உங்கள் அனைவருக்கும் திவ்யாஹரியின்..

"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!.."

20 comments:

அண்ணாமலையான் said...

நானும் ஒரு தடவ சொல்லிக்கறேன்..
அதாவது
வெரி ஹாப்பி ந்யூ இயர்...

திவ்யாஹரி said...

thanks anna..

ஸ்ரீராம். said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

புலவன் புலிகேசி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan said...

நன்றி திவ்யா ஹரி

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

//உங்ககிட்ட கேட்கிறேன்.. தெரிஞ்சவங்க சொல்லுங்க..//

‘வாழ்த்துக்கள்’னு சொல்லணும். என்ன சரிதானே.??

அந்த சாக்குல ஒரு கவிதை எழுதிட்டீங்களே. வாழ்த்துக்கள். வாழ்க..வலம்பெறுக...நலம்பெறுக...

ரிஷபன் said...

அட இப்படிக் கூட வாழ்த்தலாமா.. புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நினைவுகளுடன் -நிகே- said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Priya said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

பூங்குன்றன்.வே said...

மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.

அண்ணாமலையான் said...

எங்க நம்ம பக்கம் ஆள கானோம்? சீக்கிரம் வந்து உங்க ஓட்டயும் கமெண்டும் போட்டுட்டு போங்க....

திவ்யாஹரி said...

நன்றி ஸ்ரீராம்..
நன்றி புலவரே..
நன்றி தேனம்மைலக்ஷ்மணன்..
நன்றி பாலாசி..
வாழ்த்தலாம் ரிஷபன். நன்றி நண்பா..
நன்றி நினைவுகளுடன் நிகே..
நன்றி பிரியா..
நன்றி பூங்குன்றன்..

அண்ணாமலையான் said...

எங்க நம்ம பக்கம் ஆள கானோம்? சீக்கிரம் வந்து உங்க ஓட்டயும் கமெண்டும் போட்டுட்டு போங்க....

அண்ணா, நான் ஒரு திருமணத்திற்காக குன்னூர் போய் இருந்தேன்.. அதன் வரவில்லை.. இனி வருவேன்..

கமலேஷ் said...

வாழ்த்து கவிதை எழுத முனைந்த முயற்சியே கவிதை ஆகி இருக்கிறது...உங்களுக்குன் எந்தன் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

சிங்கக்குட்டி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)

திவ்யாஹரி said...

நன்றி கமலேஷ்..

திவ்யாஹரி said...

நன்றி சிங்கக்குட்டி

சினிமா புலவன் said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

எப்படிச்சொன்னாலும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்தானென்று நினைக்கிறேன்.

தங்கள் வாழ்த்துச்சொன்னவிதமும் சூப்பர்.

தாங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும்
மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நேரம்கிடைக்கும்போது இதையும் கொஞ்சம் பர்க்கவும்..

http://fmalikka.blogspot.com

பித்தனின் வாக்கு said...

நல்லன எல்லாம் பெற்று, தீயன விலகி மனம் போல வாழிய நீர். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.

mohamedali jinnah said...

"உங்கள் மீது அமைதி நிலவுவதாக" அஸ்ஸலாமு அலைக்கும் (May Peace be upon you)

என்னும் அற்புத முகமனாகும். "உங்கள் மீது அமைதி நிலவுவதாக" என்று பொருள்படும் இந்த முகமன் கேட்பவர் உள்ளங்களை கொள்ளை கொண்டது. அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. மனிதகுலம் என்றென்றும் ஏங்குவது மன அமைதிக்காகத்தான். ஒருவர் நமது அமைதிக்காக பிரார்த்திக்கும் போது யார் தான் மகிழ்ச்சியடையாமல் இருப்பர்?

Post a Comment