Wednesday, January 13, 2010

பொங்கட்டும் மகிழ்ச்சிப் பொங்கல்..


கெட்ட விஷயங்களை மறந்து..
புது வாழ்வு வாழ போகி..

வாய் மட்டும் இல்லாமல்..
பேசும் வார்த்தையும் இனிக்க கரும்பு..

வெள்ளை உள்ளங்கொள்ள
வலியுறுத்தும் பொங்கல்..

வாங்குபவர் வாழ்வும்
மங்களகரமாக மாற மஞ்சள்..

உழைத்த உள்ளங்கள் குளிர
அவர்களை போற்ற உழவர் திருநாள்..

அன்னையை போல பால் தந்து
உயிர்காக்கும் பசுவுக்காக பூஜை.. மாட்டுப் பொங்கல்..

அனைத்து பெண்களையும் போற்றும் வகையிலும்,
மகிழ்விக்கும் வகையிலும்.. கன்னிப் பொங்கல்..

இது பற்றி எல்லாம் நினைக்காமல் நடிகர்,
நடிகையிடம் பேட்டி காணும் டிவி சேனல்கள்..

தமிழே அறியாத அந்த நடிகை
சொல்லும் "ஏன் யணிய போன்கள் வழ்த்துக்கள்"..

இதற்கு மத்தியில் ஒரு தொலைக்காட்சி மட்டும்
உண்மையான அர்த்தம் அறிந்து
கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது!!..

அனைவருக்கும் உங்கள் தோழி திவ்யாஹரியின்
இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

13 comments:

மதுரை சரவணன் said...

good.happy pongal to u and all. this pohgal make all happy .

திவ்யாஹரி said...

thank u saravanan.. wish u the same..

அண்ணாமலையான் said...

நானும் சொல்லிட்டேனே? வரலியா?

ப்ரியமுடன் வசந்த் said...

தைத்திருநாள் வாழ்த்துகள்

ஸ்ரீராம். said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

sathishsangkavi.blogspot.com said...

//அனைத்து பெண்களையும் போற்றும் வகையிலும்,
மகிழ்விக்கும் வகையிலும்.. கன்னிப் பொங்கல்..//

பொங்கலோ பொங்கல்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் பவி...

ரிஷபன் said...

நல்லவை போற்றி அல்லவை மறப்போம்..இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

தமிழ் said...

இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

அன்புடன் மலிக்கா said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தோழி
அனைத்தும் பெற்று நலமாய் வாழ வாழ்த்துக்கள்

சு.செந்தில் குமரன் said...

விறகுக்குப் பதிலாக
வாழ்வின்
விகாரங்களை எரித்து
வருகின்ற நெருப்பில்
பொங்கட்டும் பொங்கல்.
அன்றுதான்
எல்லோருக்கும்
பொங்கலும் இனிக்கும்
பொங்கல் சோறும்
இனிக்கும்.

மனிதம் உள்ள 'மனித' இனத்தவர் அனைவருக்கும் பொங்கல் நன்னாள்
வாழ்த்துகள்

திவ்யாஹரி said...

நன்றி அண்ணா..
நன்றி வசந்த்..
நன்றி ஸ்ரீராம்..
நன்றி சங்கவி..
நன்றி ரிஷபன்..
நன்றி திகழ்..
நன்றி மலிக்கா..
நன்றி செந்தில்குமரன்..

நிஜாம் கான் said...

//இதற்கு மத்தியில் ஒரு தொலைக்காட்சி மட்டும்
உண்மையான அர்த்தம் அறிந்து
கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது!!..//

அதே அதே! நன்றி. உங்கள் பணி தொடரட்டும்..,

திவ்யாஹரி said...

நன்றி நிஜாம்..

Post a Comment